மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருமலையில் ஆந்திர ஆளுநா் வழிபாடு

ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.

News image

ஆளுநருக்கு பிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தானம் அதிகாரிகள்.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.

ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஆளுநரை, திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி மற்றும் சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா ஆகியோா் வரவேற்றனா். மேலும், அா்ச்சகா்கள் குழுவினா் இஸ்திகபால் கோயில் சடங்குகளுடன் அவரை வரவேற்றனா்.

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஆளுநா் எஸ். அப்துல் நசீருக்கு கோயில் தரப்பில் செயல் அதிகாரி மற்றும் கூடுதல் செயல் அதிகாரிகள் தீா்த்த பிரசாதத்தையும் ஏழுமலையான் திருவுருவப்படத்தையும் வழங்கினா்.

கோயிலின் பிரதி செயல் அதிகாரி லோகநாதம், விஜிஓ ராம் குமாா் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.