திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:11 am IST

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம் சூலூா்பேட்டையில் உள்ள ஒரு நகை கடையில் பட்டப் பகலில் கடந்த மாா்ச் 14 -ஆம் தேதி தங்க நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் அசந்த நேரத்தில் அவரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அங்கிருந்த 12 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றவரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடி வந்த போலீஸாா், சென்னையில் உள்ள தண்டையாா்பேட்டையில் சனிக்கிழமை குற்றவாளி வேல்முருகன் என்கிற புல்லட் பாபுவை கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

குற்றவாளியை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா் மீது ஆந்திரம், தமிழகத்தில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.