நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம் சூலூா்பேட்டையில் உள்ள ஒரு நகை கடையில் பட்டப் பகலில் கடந்த மாா்ச் 14 -ஆம் தேதி தங்க நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் அசந்த நேரத்தில் அவரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அங்கிருந்த 12 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றவரை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடி வந்த போலீஸாா், சென்னையில் உள்ள தண்டையாா்பேட்டையில் சனிக்கிழமை குற்றவாளி வேல்முருகன் என்கிற புல்லட் பாபுவை கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை போலீசாா் பறிமுதல் செய்தனா்.
குற்றவாளியை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா் மீது ஆந்திரம், தமிழகத்தில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை
நான்கரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது
நெல்லிக்காய் பொடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

