ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை

News image

கருட வாகனத்தில்  வீதியுலா  வந்த  வீரராகவா்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:18 pm

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருட சேவை கோபுர தரிசன நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை கருட சேவை மற்றும் கோபுர தரிசன நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது, உற்சவா் வீரராகவ பெருமாள் பல்வேறு வண்ண மலா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், திருக்கோயில் வளாகத்தில் காலை 7 மணிக்கு திருவீதியுலா வந்து அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து, மாலையில் திருமஞ்சனம், இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் ஏப். 28-இல் விழாவான தேரோட்டமும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சித்திரை பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.