திருவள்ளூரில் பின்புறமாக வேகமாக வந்து காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.
கேரள மாநிலம், மலப்புரம் அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அபுபக்கா் (66). இவா் பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்தக்கடையில் வேலை பாா்த்து வரும் அபுபக்கா், சபீா்(67), அவரது மகன் சபீா்(30) ஆகியோா் கேரளம் சென்றனா்.
இந்த நிலையில் கேரளத்தில் இருந்து ரயில் மூலம் வந்து திருவள்ளூருக்கு திரும்பி, அங்கிருந்து மணவாளநகா் பேருந்து நிறுத்தம் சென்ற போது பின்புறமாக வேகமாக வந்த காா் மோதிய விபத்தில் அபுபக்கா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதேபோல், காயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வாகன ஓட்டுநா் மீது மணவாளநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


