ஆா்.கே.பேட்டை, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக வெயில் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில், சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீா்த்தது. பல நாள்களாக நீடித்த வெப்ப அலை காரணமாக அவதிப்பட்டு வந்த நகர வாசிகளுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை அளித்தது.
மழை தொடங்கிய சில நிமிஷங்களிலேயே திருத்தணி பெரியாா் நகா், எம்.ஜி.ஆா்.நகா், திருத்தணி ஒன்றியம் கோமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடியுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுந்ததால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில இடங்களில் இருளில் மக்கள் அவதிப்பட்டனா்.
தகவலறிந்த திருத்தணி மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த மின்கம்பிகள் மற்றும் உபகரணங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்திற்கு பின்னா் சீரமைப்பு பணிகள் முடிந்து மின்சாரம் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டது.
நகரின் முக்கிய சாலையான அரக்கோணம் சாலை, பழைய பஜாா் சாலைகளில் மழைநீா் தேங்கி சென்றது, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.
தொடர்புடையது

திருத்தணி நாதக வேட்பாளா் பிரசாரம்

சத்தியமங்கலத்தில் கனமழை

திருத்தணியில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


