எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆவடி-திருவள்ளூர் சாலையில் பாதுகாப்பின்றி எரிவாயு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஆவடி சிடிஹெச் சாலை பகுதியில் கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் பாதுகாப்பின்றி ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது.

News image

திருமுல்லைவாயல் சாலையில் பாதுகாப்பின்றி அடுக்கிவைக்கப்பட்டுள்ள எரிவாயு இரும்புக் குழாய்கள்

Updated On :8 செப்டம்பர் 2024, 9:38 pm

ஆவடி சிடிஹெச் சாலை பகுதியில் கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் பாதுகாப்பின்றி ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

திருவள்ளூர் அருகே நயப்பாக்கம் பகுதியில் இருந்து புதுச்சத்திரம், திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல் வழியாக அம்பத்தூர் வரை 32 கி.மீ. தொலைவு கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்காக சிடிஹெச் சாலை பகுதியில் ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலுள்ள சிடிஹெச் சாலையில் எரிவாயு ராட்சத குழாய்கள் புதைக்கும் பணிகளில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் சிடிஹெச் சாலையில் இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே ராட்சதப் பள்ளங்களை இயந்திரங்கள் மூலம் தோண்டி, 1.5 மீட்டர் ஆழத்திற்கு இரும்புக் குழாய்கள் பதிக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக சாலையில் தோண்டப்படும் பள்ளங்களில் முறையாக தடுப்புகள் அமைக்கப்படவில்லை. பெயரளவிற்கு தரமற்ற இரும்புத் தடுப்புகளை அமைத்து விட்டு செல்கின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் சிடிஹெச் சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் போதிய மின்விளக்கு வெளிச்சம் இன்றி தடுப்புகளின் மீது மோதி பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். மட்டுமல்லாமல் ராட்சத இரும்புக் குழாய்களை சாலை ஓரங்களில் முறையான தடுப்புகளின்றி அடுக்கி வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இரும்பு குழாய்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மோதி விபத்துகளில் சிக்குகின்றனர்.

தற்போது இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், தோண்டிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதிலும் முறையாக தடுப்புகள் வைக்காததால் பாதசாரிகள் பள்ளங்களில் விழும் நிலை உள்ளது.

இரும்புக் குழாய்கள், இயந்திரங்கள், பள்ளங்கள் இருக்கும் பகுதிகளில் அறிவிப்பு பலகைகள், ஒளிரும் மின் விளக்குகள், தரமான இரும்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையைப் பாதுகாப்பாக கடக்க முடியும்.

குழாய் பதிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறை, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் கவனிக்காததால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அவதிப்பட்டு செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட தனியார் எரிவாயு நிறுவன அதிகாரிகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிடிஹெச் சாலைகளில் செய்ய வேண்டும் என்றனர்.

இது குறித்து தனியார் எரிவாயு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது:

எரிவாயு குழாய் பதிக்கும் இடங்களில் போதிய தடுப்புகள் அமைத்துள்ளோம். மேலும் கூடுதலாக தடுப்பு அமைக்க நடவடிக்கைகளை எடுக்கிறோம். தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் செய்வோம். சாலையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயந்திரங்கள் மூலம் தோண்டுகிறோம். இப்பணிகள்

இன்னும் 3 மாதங்களில் முடிந்து விடும் என்றார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:

சாலையில் தோண்டிய பள்ளங்களை சிமென்ட் கலவை போட்டு மூடுமாறு அறியுறுத்தி உள்ளோம். சாலையோரத்தில் குழாய்களை பதிக்கவும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், மழை காலம் தொடங்கவுள்ள நிலையில் விரைந்து பணிகளை முடிக்கவும் அறிவுறுத்திவுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.