15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

Updated On :11 ஜூன் 2024, 9:16 pm

கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் 7 பேர் மீது என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்துல் சமீம் (30), தவுபீக்(27), காஜா மொய்தீன் (53), மெகபூப் பாஷா (48), இஜாஸ் பாஷா (46), ஜாபர் அலி(26), சிக்காபுதீன்(36) ஆகிய 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். இவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது போலீஸôரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது ஏற்கெனவே பூந்தமல்லியில் உள்ள இந்த சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 7 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.

இதையடுத்து, தில்லி, பெங்களூரு, சேலம் ஆகிய சிறைகளிலிருந்து 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.