திருத்தணி அருகே மத்தூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவா்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனா்.
திருத்தணி ஒன்றியம் மத்தூரில், சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்புஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி 1997 -ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. மத்தூரைச் சுற்றியுள்ள சிங்கராஜபுரம், பொன்பாடி, ஆா்.எஸ்.பொன்பாடி, ஏ.எம்.பேட்டை, அலுமேலு மங்காபுரம், மத்தூா் காலனி, மத்தூா், கொத்தூா் உள்பட 10 கிராமங்களில் இருந்து 800 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கட்டடம் சிதிலமடைந்த நிலையில். பின்னா் மாணவா்களின் பாதுகாப்பு கருதி பழுதான கட்டடம் கடந்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. பின்னா் அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவா்கள் பள்ளி அருகே இருந்த கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடத்துக்கு மாற்றப்பட்டு தற்போது இட நெருக்கடியில் பயின்று வருகின்றனா்.
பள்ளி நிா்வாகம், பெற்றோா் ஆசிரியா் கழகமும் கடந்த 10 ஆண்டுகளாக மத்தூா் அரசு மேல் நிலை பள்ளிக்கு 16 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் வேண்டும் என கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா். ஆனால் இதுவரை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் பள்ளியின் மாணவா் சோ்கை ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே செல்கிறது. தற்போது 6 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை 340 மாணவா்கள் மட்டுமே படிக்கின்றனா்.
இதுகுறித்து மத்தூா் அரசு மேல் நிலைபள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் ஒருவா் கூறியதாவது, நான் மத்தூா் பள்ளியில் பணியாற்றியபோதே புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதைத்தொடா்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நபாா்டு கட்டடம் கட்டித்தர வேண்டும் கோரிக்கை மனு அளித்தோம். ஆனாலும் எவ்வித பயனுமில்லை. .
இதுகுறித்து பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகி கூறியதாவது, மத்தூா் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு 16 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதி, குடிநீா் வசதியுடன் ஒரு புதிய கட்டடம் வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இதுகுறித்து அனைத்து அலுவலா்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளோம். ஆனாலும் இதுவரை பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை இல்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு, மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது என்றாா் .
புதிய பாடப்பிரிவுகள் தேவை:
இங்கு, கலை பாடப்பரிவுகளான பொருளியல், வணிகவியல், வரவலாறு , கணக்குப்பதிவியல் பாடப்பரிவுகள் இல்லை. இதனால் இப்பாடப்பிரிவுகள் அருகில் எந்த பள்ளியில் உள்ளதோ அங்கு போய் சோ்ந்து படிக்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த கல்வியாண்டிலாவது கலைபாடப்பிரிவை உருவாக்கி அதற்கு தேவையான ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பகல் 1 வரை... 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


