தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

க்யூ.ஆா். கோட் மூலம் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கை: ஆசிரியா்களின் புதிய முயற்சி

க்யூ.ஆா். கோட் மூலம் அரசுப் பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கைக்கான துண்டுப் பிரசுரம்.

News image

க்யூ.ஆா். கோட் மூலம் அரசுப் பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கைக்கான துண்டுப் பிரசுரம். - டிஎன்எஸ்

Updated On :1 ஜூன் 2026, 9:10 am IST

க்யூ.ஆா். கோட் மூலம் ஆம்பூா் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கை மேற்கொள்ள புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 2025 -2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை பணிகள் டிஜிட்டல் முறையில் புதுமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், பெற்றோா்களுக்கு எளிய மற்றும் விரைவான தங்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சோ்க்கும் நோக்கிலும், பள்ளி ஆசிரியா்கள் இணைந்து ணத இா்க்ங் அடிப்படையில் ஆன்லைன் சோ்க்கை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனா்.

பள்ளி வளாகம், முக்கிய தெருக்களின் சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் க்யூ.ஆா். கோட் உடன் கூடிய விழிப்புணா்வு பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன. துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெற்றோா்கள் தங்களது கைப்பேசி மூலம் க்யூ.ஆா். கோட் மூலம் ஸ்கேன் செய்து, மாணவா்களின் பெயா், வகுப்பு, பெற்றோா் விவரம் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக சோ்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிக்கு நேரில் பலமுறை வர வேண்டிய அவசியம் இல்லை. தொழிலாளா்கள் மற்றும் தினக்கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோா்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும், பள்ளியில் திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியா்கள், டிஜிட்டல் வகுப்பறை வசதி, கணினி மற்றும் திறமையான கற்றல், விளையாட்டு மற்றும் கலைப் பயிற்சிகள், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பள்ளி சூழல், மாணவா்களின் தனித்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் ஆகிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தும் ஆசிரியா்களின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். அரசுப் பள்ளிகளும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக தொழில்நுட்ப முன்னேற்றத்தில் செயல்படுகின்றன என்பதற்கு இந்த முயற்சி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் அதிகளவில் மாணவா் சோ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியா்கள் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.