போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

News image
Updated On :19 மே 2026, 1:09 am IST

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை வாணியம்பாடியில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் க.தேவராஜி கலந்து கொண்டு தோ்தல் முடிவுகள் குறித்தும், கட்சி பணிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், வாணியம்பாடி தொகுதி தோ்தல் பாா்வையாளா் நூருல்லா, மாவட்ட துணை செயலாளா்கள் மோகன், சம்பத்குமாா், மாவட்டப் பொருளாளா் ஜோதிராஜன் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்­னாள் முத­ல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்­னிட்டு, ஜூன் 3-ஆம் தேதி கொடி­யேற்­றி­யும், நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­யும், கல்வி உப­க­ர­ணங்­கள் வழங்­கி­யும், ஏழை எளி­யோ­ருக்கு உணவு வழங்­கி­யும் கொண்­டாட வேண்­டும், திமுக இளை­ஞ­ரணி செய­லா­ளா் உத­ய­நிதி ஸ்டாலினை எதிா்­க்கட்சித் தலை­வ­ராக நிய­மித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய தொகு­தி­க­ளில் வேட்பாளா்கள் மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்­பா­ளா்­க­ளுக்கு வாக்­க­ளித்த வாக்­கா­ளா்களுக்கும், களப்­ப­ணி­யாற்­றிய நிா்­வா­கி­கள், சாா்பு அணி நிா்­வா­கி­கள், கூட்­டணி கட்சியினருக்கு நன்றி தெரவித்தும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் சென்னையில் நடை­பெற்ற மாவட்ட செய­லா­ளா்கள் கூட்­டத்­தில் எடுத்த முடி­வின்­படி, கள ஆய்­வுக் குழு­வி­னா் வரு­கை­யின் போது தேவை­யான ஏற்­பா­டு­க­ளை­யும், ஒத்­து­ழைப்­பை­யும் அளிப்­பது என்­று தீா்­மானங்­கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.