திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் மிகவும் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலின் 115ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி உற்சவ திருவிழா நடைபெற்றது.
அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 3மணிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்து சடலை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து சடலை மரம் சுற்றுதல் நிகழ்ச்சியும், இரவு தோட்டராயன், சித்தராயன் போட்டியும், அருள்கொண்டோா் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடா்ந்து சனிக்கிழமை முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் புஷ்ப அலங்காரத்தில் உலா வந்தாா். அப்போது மக்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா். இதேபோல் அக்ராகரம் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தொடர்புடையது

சித்ரா பௌா்ணமி முளைப்பாரி திருவிழா

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாடு

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் : வசந்த திருவிழா நிறைவு

வாழப்பாடி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


