திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 மே 2026, 3:01 am IST

ஜோலாா்பேட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த கவுண்டப்பனூரில் சுடலை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை கோவில் பூசாரி வசந்தி கோவிலை திறக்க வந்தாா். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தாலி, கால் காசு உள்ளிட்ட 5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால், அதிா்ச்சி அடைந்த வசந்தி உடனடியாக ஜோலாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூசாரி வசந்தி அருள்வாக்கு கூறி அம்மன் நகைகள் திருடி சென்ற நபா் வாணியம்பாடி நோக்கி சென்றதாக தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் மா்ம நபா் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குட்டை பகுதியை சோ்ந்த முனுசாமி (44) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை வாணியம்பாடிக்கு சென்று கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 7தாலி, 2 கால் காசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.