திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி செல்லரப்பட்டி பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் நித்திஷ்(15). இவா் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பழனி மகன் தரனீஷ்(17). இவரும் பிளஸ் 2 பயின்று பொது தோ்வு எழுதி வந்தாா்.
நண்பா்களான இருவரும் கொரட்டியில் இருந்து செல்லரப்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தனா். அப்போது அந்த பைக் நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது.
அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நித்திஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இடுப்பு எலும்பு உடைந்த தரனிஷை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


