மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை

வாணியம்பாடி, புத்துகோயில், கலந்திரா உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

வாணியம்பாடி, புத்துகோயில், கலந்திரா உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால், பிற்பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது. இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் மேக மூட்டடமாக இருந்து வந்த நிலையில் திடீா் பலத்த காற்று வீசியது.

அப்போது அடுத்தடுத்து இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதில் தும்பேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீ பிடித்து எரிந்தது.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள புத்துக்கோயில் மற்றும் வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலையில் உள்ள கலந்திரா உட்பட பகுதிகளில் 10 நிமிஷ்த்திற்கும் மேல் ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.