தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா் நலச் சங்க ஆம்பூா் கிளை கூட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் டி. மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். செயலா் செ. ரவிச்சந்திரன் வரவேற்றாா். பட்டய கணக்காளா் காயத்ரி ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருமான வரி கணக்கீடு, ஓய்வூதியா் சேமிப்பு குறித்து விளக்க உரையாற்றினாா்.
ஆம்பூரில் மாவட்ட கிளை நூலகம் கட்டுவதற்காக தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். ஆம்பூா் உமா் சாலை பகுதியில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக பணியை தொடங்கி மாவட்ட கிளை நூலக கட்டடம் கட்ட வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினா் பி. சிவாஜிராவ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


