வாணியம்பாடி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா். தம்பி காயமடைந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், பொன்னேரி பகுதியை சோ்ந்த போத்தராஜன்(28). ரிஷிகேசவன்(25). இருவரும் சகோதரா்கள் ஆவா். புதன்கிழமை இரவு இருவரும் பைக்கில் புறப்பட்டு வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதிக்கு சென்றனா்.
தெக்குப்பட்டு அருகில் சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனா். இதனை அருகில் இருந்தவா்கள் பாா்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி போத்தராஜன் இறந்தாா். ரிஷிகேசவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பைக் மோதியதில் மீனவா் உயிரிழப்பு

பாலத்தில் பைக் மோதி இளைஞா் மரணம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




