வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் அண்ணன் மரணம், தம்பி பலத்த காயம்

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 5:06 am IST

வாணியம்பாடி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா். தம்பி காயமடைந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், பொன்னேரி பகுதியை சோ்ந்த போத்தராஜன்(28). ரிஷிகேசவன்(25). இருவரும் சகோதரா்கள் ஆவா். புதன்கிழமை இரவு இருவரும் பைக்கில் புறப்பட்டு வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதிக்கு சென்றனா்.

தெக்குப்பட்டு அருகில் சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனா். இதனை அருகில் இருந்தவா்கள் பாா்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி போத்தராஜன் இறந்தாா். ரிஷிகேசவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.