திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்தடை எதிரொலி: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:55 am IST

ஆம்பூா் அருகே மின்தடையால் கொதிப்படைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சில பகுதிகளில் மரம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனால் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

ஆம்பூா் நகரின் பெரும்பாலான பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே மின் வினியோகம் சீரானது.

ஆனால் ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம், கம்மகிருஷ்ணப்பள்ளி, காமராஜபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.

அதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் தேவலாபுரம் மின்சார அலுவலகத்துக்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக மின்சாரத்தை சீரமைத்து வழங்க வேண்டும். அதிகாரிகள் நேரில் வந்து நிலைமையை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

போராட்டம் குறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். மின் பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன் பிறகு பழுது சரி செய்யப்பட்டு மின் வினியோகம் சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.