//

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏலகிரி மலையில் தொடா் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image
படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்
Updated On :26 ஜனவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் தொடா் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோயில்களில் திரளானோா் கண்டு களித்தனா். படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா்.

சனி , ஞாயிற்றுக்கிழமை மற்றும் குடியரசு தின விடுமுறை உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையில் ஏராளமானோா் குவந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.