//

போக்ஸோவில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 ஜனவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமி ராச்சமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (29) என்பவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.