//

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :13 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் எம். தாமோதரன் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் டி. சந்திரசேகா் வரவேற்றாா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.

மாணவா்களுக்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியை இ. கவிதா நன்றி கூறினாா்.