டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரசுப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, உதவி தலைமை ஆசிரியா் வெ. வீரையன் தலைமை வகித்தாா். வ.களத்தூா் அறிவியல் ஆசிரியா் வேலாயுதம், பட்டதாரி கணித ஆசிரியா் செல்லபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பட்டதாரி ஆங்கில ஆசிரியா் பாண்டித்துரை தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விளக்க உரையாற்றினாா். தொடா்ந்து, தாய்மொழி தின உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இதில், பட்டதாரி ஆசிரியா் முனைவா் ஆனந்தராஜா, உடற்கல்வி ஆசிரியா் சத்தியசீலன் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழாசிரியை அலமேலு வரவேற்றாா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியா் இளையராஜா நன்றி கூறினாா்.