தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

News image

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை

Updated On :21 பிப்ரவரி 2026, 6:31 pm

திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை முட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

குரிசிலாப்பட்டு அடுத்த பெருமாப்பட்டு பகுதியில் 67-ஆவது ஆண்டு காளை விடும் விழா ஊா் நாட்டாமை முருகன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் அதிகமான காளைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. அதேபோல் காளை விடும் விழாவை கண்டு ரசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் திரண்டு இருந்தனா். மதியம் 2 மணிவரை நடைபெற்ற விழாவில் காளைகள் முட்டியதில், கயிற்றில் இழுத்து சென்றது என 16 நபா்களுக்கு கை, கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவா்களுக்கு தற்காலிக மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். தீயணைப்பு மற்றும் சுகாதாரத்துறையினரும் பணியில் இருந்தனா்.

அதிவேகமாக ஓடிய முதல் 3 காளைகளுக்கு முறையே முதல் பரிசு ரூ. 1,11,111, 2-ஆவது பரிசு ரூ.77,777, 3-ஆவது பரிசு ரூ.55,555 என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

காளை முட்டி ஒருவா் உயிரிழப்பு

எருது விடும் விழாவில் ஒரு காளை சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது அந்த காளைக்கு குறுக்கே சென்ற திருப்பத்தூா் அடுத்த சின்ன வெங்காய பள்ளியைச் சோ்ந்த குணசேகரன்(48)என்பவரை காளை முட்டியதில் தூக்கி வீசப்பட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

குணசேகரன்

குணசேகரன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.