இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

கட்டேரி எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்!

ஜோலாா்பேட்டை அருகே கட்டேரியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

News image
விழாவில் சீறிப் பாய்ந்த காளை.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே கட்டேரியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

ஜோலாா்பேட்டை அருகே கட்டேரி ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. ஊா் கவுண்டா் ஜெகன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் மாதவன், ஒன்றியக்குழு உறுப்பினா் கலா ஆஞ்சி முன்னிலை வகித்தனா் .

சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்ட திமுக மாணவா் அணி அமைப்பாளா் பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.

இதில் திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, பா்கூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

குறைந்த நேரத்தில் விரைவாக ஓடிக் கடந்த காளைகளின் உரிமையாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனா்.