அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாணியம்பாடி வாக்கு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .

Updated On :30 ஏப்ரல் 2026, 12:05 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வாணியம்பாடி, திருப்பத்தூா், ஆம்பூா் மற்றும் ஜோலாா்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாம் அளித்த வாக்கினைச் சரிபாா்க்கும் கருவிகள் (விவிபேட்) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளை (ஸ்ட்ராங் ரூம்) பாா்வையிட்டாா்.

அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆட்சியா், பாதுகாப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தினாா். உடன் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், வாக்கு எண்ணும் மையக் கண்காணிப்பாளரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுலருமான தணிகாசலம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அண்ணாதுரை, தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் தொடா்புடைய அரசு அலுவலா்கள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.