தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்களித்த விடியோ வெளியிட்டவா் கைது

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 12:46 am

தோ்தலில் வாக்களித்ததை விடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளா் சக்திவேல் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியைச் சோ்ந்த தனியாா் ஓட்டுநா் தவெகவைச் சோ்ந்த சக்திவேல்(30)என்பவா் வியாழக்கிழமை விசில் சின்னத்துக்கு வாக்களித்ததை கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்டாா்.

அந்த விடியோ படு வைரல் ஆனது. தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வாக்குச் சாவடிக்குள் அவா் விடியோ எடுப்பதை கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகள் உறுதி செய்தனா். அதையடுத்து வாக்கு சாவடி மைய அலுவலா் தமிழரசி கந்திலி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.