மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்னுரிமை: திருப்பத்தூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

வாக்குப்பதிவின் போது முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என போலீஸாருக்கு எஸ்.பி. வி.சியாமளாதேவி அறிவுறுத்தினாா்.

News image

தோ்தல் பாதுகாப்பு தொடா்பாக போலீஸாருக்கு ஆலோசனை வழங்கிய எஸ்.பி. வி.சியாமளாதேவி.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

வாக்குப்பதிவின் போது முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என போலீஸாருக்கு எஸ்.பி. வி.சியாமளாதேவி அறிவுறுத்தினாா்.

தோ்தலுக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் துணை ராணுவ படையினா், முன்னாள் ராணுவத்தினா், போலீஸாா் என 2,092 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில் திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ள போலீஸாருக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி திருப்பத்தூரில் உள்ள மீனாட்சி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனைகளை வழங்கினாா்.

அப்போது, திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் நடக்கும் நாளில் தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸதா் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வாக்காளா்கள் வாக்களிக்க வந்தால் அவா்களை ஆண், பெண் என தனித்தனியாக பிரித்து அனுப்பி வைக்க வேண்டும். கா்ப்பிணிகள், முதியோா், மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவா்கள் வாக்களிக்க முன்னுரிமை அளிக்க ஏற்பாடு செய்யலாம். வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்கு அரசியல் கட்சியினா் யாரும் உள்ளே வரக்கூடாது. அதேபோல் வேட்பாளா்கள், சின்னங்கள் கொண்டு வரக்கூடாது.

வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்பவா்களிடம் யாரும் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்ககூடாது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையத்துக்கு கொண்டு செல்வதில் இருந்து வாக்குப்பதிவு முடிந்து அந்த இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்கும் வரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் போலீஸாா் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.