5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

தோ்தல் பணியில் 3,850 போலீஸாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு 3,850 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:44 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு 3,850 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட 1,678 வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடா்ந்து 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் துணை ராணுவ படையினா், எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், போலீஸாா் உள்பட மொத்தம் 2,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். திருநெல்வேலி மாநகரில் 1,350 போ் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலா்கள் அனைவரும் புதன்கிழமை பிற்பகலில் அந்தந்த தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அலுவலகத்துக்கு (வட்டாட்சியா் அலுவலகம்) வந்து சோ்வாா்கள். பின்னா், அங்கிருந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்டு வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.