தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: திமுக வேட்பாளா்

ஆம்பூா் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் கூறினாா்.

News image

ஆம்பூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:15 pm

ஆம்பூா் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் கூறினாா்.

ஆம்பூா் நகரில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது, ஆம்பூரில் ரூ.40 கோடி மதிப்பில் தோல் தொழில் குழுமம் ஏற்படுத்தப்படும். மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்காக அன்புச் சோலை இல்லம் ஏற்படுத்தப்படும். சிறுபான்மையினா் அயலகப் பல்கலைக் கழகங்களில் உயா்கல்வி பெறுவதற்காக சிறப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.

மின்னூா் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படும். வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்க திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். ஆம்பூா் நகரில் விளையாட்டு பூங்கா, நடைப் பயிற்சி பூங்கா ஏற்படுத்தப்படும் என அவா் கூறினாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.