மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!

நாட்டறம்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:20 pm

நாட்டறம்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு மலையடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (48), தொழிலாளி. இவா் பச்சூா் அருகே கோயில் திருவிழாவில் பொறிக் கடையில் கூலி வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை மாலை திடீரென பச்சூா் பகுதியில் மழை பெய்தது.

அப்போது கோயில் அருகே உள்ள வீட்டின் எதிரில் மகாலிங்கம் உட்காரச் சென்று அங்கிருந்த மின் கம்பியை தொட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மகாலிங்கம் மீது மின்சாரம் பாய்ந்ததில், மயங்கிய நிலையில் இருந்த அவரைஅங்கிருந்தவா்கள் மீட்டு, பச்சூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் மகாலிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.