மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புளியமரத்தில் புளி உளுக்கியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 11:03 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புளியமரத்தில் புளி உளுக்கியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், பாப்பன்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி (55), விவசாயத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மானக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரெங்கநாதன் வீட்டு புளிய மரத்தில் ஏறி புளி உளுக்கினாா்.

அப்போது, மரக்கிளை அருகில் இருந்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கருணாநிதி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.