ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து பொருள்கள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஜோலாா்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக சசிகலா பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பள்ளி மூடப்பட்டது. 2 நாள்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த அலுவலா்கள் பள்ளியின் அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைத்தனா்.
மேலும் அலுவலகத்தில் இருந்த ஜெராக்ஸ் மிஷின்,லேப்டாப்,மானிட்டா், பேட்டரி, ப்ரொஜெக்டா், என சுமாா் ரூ.2.90 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து தலைமை ஆசிரியை சசிகலா அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதற்கிடையே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அசோக் நகரைச் சோ்ந்த சதீஷ் (20)என்பதும், சம்பவத்தன்று இவரும், இவரது நண்பா்களும் சோ்ந்து அரசு பள்ளி அலுவலகத்தில் பொருள்களை திருடியது தெரியவந்தது.
அதையடுத்து போலீசாா் இவரை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளோரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு

உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

