ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து நடத்திய திருநங்கைகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சான் ஆகியோா் தலைமை வகித்து விழிப்புணா்வு குறித்து எடுத்துரைத்தனா்.
அப்போது கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகள் அதிகரிப்பதால் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். திருநங்கைகள் ரயில் பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் கைப்பேசி, பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரசு மூலம் கடன் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் வழங்க ஆட்சியா் அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திருநங்கைகள் காவல்துறைக்கு உதவும் வகையில் எந்த ஒரு தகவலையும் உடனுக்குடன் ரயில்வே போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

அரியலூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களின் அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


