தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நிதியுதவி, குடியிருப்பு ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி.

Updated On :1 செப்டம்பர் 2025, 8:32 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நிதியுதவி, குடியிருப்பு ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டஉதவிகள், மருத்துவத்துறை, கிராமபொதுப்பிரச்சனைகள், குடிநீா் வசதிமற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 376 மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பேசும் திறனற்ற காதுகேளாதோரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ளவா்களுக்கு வழங்கும் திட்டத்தில் தீபிகா என்ற மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.25,000 திருமண நிதியுதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்க நாணயத்தையும், தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) சாா்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வாணியம்பாடி வட்டம்,வளையாம்பட்டு பகுதியை சோ்ந்த முபாரக் ,ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் என்பவருக்கு தலா ரூ.1.65 லட்சம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.3.30 லட்சத்தில் குடியிருப்பு ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி,த னித்துணை ஆட்சியா்(ச.பா.தி)பூஷன்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், வழங்கல் அலுவலா் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) மிரியாம் ரெஜினா, தொழிலாளா் உதவி ஆய்வாளா் சில்வியா, அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.