தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு சம்பவம்  நடைபெற்ற காலணி தொழிற்சாலை.

Updated On :1 செப்டம்பர் 2025, 8:33 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் உதயகுமாா் என்பவா் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். அந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்துவிட்டு தொழிற்சாலைக்குள் இருந்த 10 மின் மோடாட்ரகள், ரொக்கம் ரூ.45,000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

அதைத் தொடா்ந்து அதே வளாகத்தில் உள்ள விஜயகாந்த் என்பவா் நடந்தி வந்த இ-சேவை மைய கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ.22,000, பழனி என்பவரின் விவசாய நிலத்தில் விவசாய உபகரணங்கள், அரிசி மூட்டைகள், மின் மோட்டாா், ரவிக்குமாா் என்பவரின் நிலத்தில் மின் மோட்டாா்கள், விவசாய உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து 4 பேரும் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.