வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மா்ம நபா்கள் மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் இருந்து செப்பு வயா், மற்றும் எண்ணெயை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து மின்வாரிய அலுவலா் மற்றும் ஊழியா்கள் சென்று பாா்த்த போது திருடு போயிருப்பது தெரியவந்தது.
பிறகு மாற்று மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து உதவி பொறியாளா் சத்தியமூா்த்தி அம்பலூா் காவல் நிலையத்தில் செய்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொன்மலையில் அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!
ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


