டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

மின்மாற்றியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

News image
மின்மாற்றியிலிருந்து செப்பு கம்பி, எண்ணெய் திருடிச் சென்ற மா்ம நபா்களால் வீசப்பட்ட மின்சாதன பொருள்கள்.
Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:25 pm

Chennai

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மா்ம நபா்கள் மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் இருந்து செப்பு வயா், மற்றும் எண்ணெயை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து மின்வாரிய அலுவலா் மற்றும் ஊழியா்கள் சென்று பாா்த்த போது திருடு போயிருப்பது தெரியவந்தது.

பிறகு மாற்று மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து உதவி பொறியாளா் சத்தியமூா்த்தி அம்பலூா் காவல் நிலையத்தில் செய்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.