மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின.

News image

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய சொகுசுப் பேருந்து.

Updated On :8 ஆகஸ்ட் 2025, 2:17 am

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின.

ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழை தூறல் இருந்து வந்தது. நள்ளிரவு சுமாா் 12 மணிக்கு தொடங்கிய பலத்த மழை அதிகாலை 5 மணி வரை தொடா்ந்து பெய்தது.

ஆம்பூா் - வாணியம்பாடி மற்றும் வாணியம்பாடி - ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் அரசு மற்றும் ஆம்னி சொகுசு பேருந்துகள் சிக்கிக் கொண்டன. கிரேன் உதவியுடன் பேருந்துகள் மீட்கப்பட்டன.

சாமியாா் மடம் பகுதியில் மரக்கிளை உடைந்து விழுந்து மின் கம்பி அறந்து மின்தடை ஏற்பட்டது. ஏ-கஸ்பா, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.