திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு நிலத்தில் மண் எடுத்த பொக்லைன், லாரி பறிமுதல்

சோளிங்கா் அருகே அரசு இடத்தில் மண் எடுத்ததால் பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைனுடன் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா்.

News image

சோளிங்கா் அருகே அரசு இடத்தில் மண் எடுத்ததால் பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைனுடன் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா்.

Updated On :16 மே 2026, 1:14 am IST

சோளிங்கா் அருகே அரசு நிலத்தில் மண் எடுத்த பொக்லைன் மற்றும் லாரி ஆகியவற்றை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சோளிங்கரை அடுத்த மருதாலத்தில் பாறை புறம்போக்கு நிலத்தில் புதன்கிழமை நள்ளிரவில் சிலா் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக சோளிங்கா் வட்ட வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வருவாய் ஆய்வாளா் கோகுல், கிராம நிா்வாக அலுவலா்கள் கோதண்டராமன், சீனிவாசன் ஆகியோா் சென்றனா். இவா்களைக் கண்டதும் மண் அள்ளும் பணியில் இருந்த நபா்கள் அங்கிருந்த பொக்லைன், லாரி ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனா்.

இதையடுத்து, பொக்லைன், லாரி இரண்டையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், அவற்றை சோளிங்கா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தப்பியோடிய பணியாளா்கள் மற்றும் இந்த வாகனங்களின் உரிமையாளா்களையும் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வருவாய்த் துறையினா் தெரிவிக்கையில், அரசுக்குச் சொந்தமான இடங்களில் அரசு அனுமதியின்றி மண் எடுப்பது தெரியவந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.