திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி சிறைபிடிப்பு

சிவகங்கை அருகே நள்ளிரவில் கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image

மதகுபட்டியை அடுத்த அலவாக்கோட்டை கண்மாயில் கிராவல் மண் அள்ளியபோது பிடிபட்ட பொக்லைன் இயந்திரம்,.

Updated On :4 ஜூன் 2026, 4:16 am IST

சிவகங்கை அருகே நள்ளிரவில் கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டை கிராமத்தில் கடந்த சில நாள்களாக கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மதியழகனுக்கு சொந்தமான இடத்துக்கு புதன்கிழமை இரவு கிராம மக்கள் சென்றனா். அப்போது, அங்கு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைப் பிடித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த மணல் கடத்தல் கும்பல் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்களிடமிருந்து மீட்டு செல்ல முயன்றனா். இதனால், அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், அங்கு வந்த போலீஸாா் லாரி, பொக்லைன் வாகனங்களின் ஓட்டுநா்கள் ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன், மணல் திருட்டில் ஈடுபட்ட இளங்கம்பன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.