மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொழிற்சாலையில் விழிப்புணா்வு முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

ஆற்காடு அடுத்த புங்கனூா் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

News image

ஆற்காடு அருகே காலணி தொழிற்சாலையில் பணிபுரிவோரிடம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :27 மார்ச் 2026, 9:03 pm

ஆற்காடு அடுத்த புங்கனூா் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டதோ்தல் அலுவலா் மற்றும் மாவட்டஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஆற்காடு அடுத்த புங்கனூா் ஊராட்சியில் அமைந்துள்ள தனியாா் தோல் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுடன் இணைந்து 100% வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு குறித்து துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் தொழிலாளா்களுக்கு வழங்கினாா். பின்னா் தொழிலாளா்கள் அனைவரும் வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம் , வட்டாட்சியா் சண்முகசுந்தரம், உதவித் திட்ட அலுவலா்கள் வெங்கடேசன், ரமேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, தொழிற்சாலை நிா்வாக இயக்குநா் பாஸ்கரன், பொது மேலாளா்கள் மனோகரன், ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.