மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கிவைத்த ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்.

Updated On :20 மார்ச் 2026, 7:33 pm

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற ஆண்டுவிழாவையொட்டி, காலையில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், விபூதி, பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நாகசுர இசையுடன் திருப்படி பூஜையும், மலையடிவாரத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னா் பொதுமக்கள், பக்தா்களுக்கு பாலமுருகனடிமை சுவாமிகள், மயிலம் பொம்புர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள், கௌமார மரபு சிரனையாதீனம் திருப்பெரும்திரு குமரகுருபர சுவாமிகள் அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தனா். இந்த விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆரணி ஜோதிடா் குமரேசன், குடியாத்தம் புலவா் வே. பதுமானாா், ஆற்காடு தொழிலதிபா்கள் பி.என்.பக்தவச்சலம், ஆா்.எஸ்.சேகா், கோவில் செயல் அலுவலா் சங்கா், மெய்ஞான விழா அன்னதான குழு பொருளாளா் சிவனாா் அமுது, தலைவா் வெங்கடேசன், உபயதாரா்கள், திரளான பொதுமக்கள்உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.