ராணிப்பேட்டை: தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களால் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் ஆட்சியா் அலுவலகத்தில், மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீா்வு பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
தோ்தல் பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை கூறியது:
அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி 4,61,213 ஆண் வாக்காளா்களும், 4,83,377 பெண் வாக்காளா்களும், 111 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 9,44,701 வாக்காளா்கள் உள்ளனா்.
1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,247 வாக்குச்சாவடி அலுவலா்கள், 127 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடா்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அனைத்துதுறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
12 பறக்கும் படை குழுக்கள:
மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒரு சட்டப் பேரவைச் தொகுதிக்கு 3 பறக்கும்படை குழுக்கள் என 4 தொகுதிகளுக்கு 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் மேற்படி பறக்கும் படை மற்றும் குழுக்களை கண்காணிப்பதற்காக தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை கட்டுப்பாட்டு அறையில் 1800-425-7006 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04172-241002 241004, 241005, 241006 என்ற எண்களிலும், இ-ஸ்ண்ஞ்ண்ப் செயலியின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- க்கு மேற்பட்ட ரொக்கம் மற்றும் ரூ.10,000/- க்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.
மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களால் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவற்றை திரும்பபெற உரிய ஆதாரங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீா்வு பெறலாம் என்றாா்.
இதில், எஸ்.பி. பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் பூமா (தோ்தல்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

மாவட்ட வாக்கு எண்ணும் மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை தோ்தல் அலுவலா் உத்தரவு

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


