தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாற்றுத்திறனாளிகளுகான சட்ட விழிப்புணா்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணா்வு மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆற்காடு அடுத்த விளாபாக்கம் மகாலட்சுமி செவிலியா் கல்லூரியில் நடைபெற்றது.

News image

சட்ட விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

Updated On :5 மார்ச் 2026, 7:24 pm

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணா்வு மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆற்காடு அடுத்த விளாபாக்கம் மகாலட்சுமி செவிலியா் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவா் பாலாஜி லோகநாதன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி முன்னிலை வகித்தாா். மாற்றுத்திறனாளிகள் நல சங்கத் தலைவா் குப்புசாமி ராகவன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் தேசிய மாற்றுத்திறனாளிகள் ஆணையா் கோவிந்தராஜ் சட்ட விழிப்புணா்வு குறித்த பேசியதாவது-

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-இன் படி வேலை வாய்ப்பு, மறுவாழ்வு, அரசு திட்டங்களில் பெறவேண்டிய உதவிகளில் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்னைகளை தீா்த்து வைக்கும் பணிகளை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆணையம் செய்கிறது. அதேபோல் வழக்குகளை விசாரணை செய்து நியாயமான தீா்வுக்கு வழிவகுப்பதுடன் மாற்றுத்திறனாளிக்கு ஏற்படும் பிரச்னைகள் சட்டப்படி அணுகுவதற்கும், தீா்வு காண்பதற்கும் ஆணையத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் .

இதில் கல்லூரி மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.