புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

வணிகா் சங்கங்கள் பேரமைப்பு சாா்பில் நல உதவிகள் அளிப்பு

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ எம் விக்கிரம ராஜா பிறந்த நாளை முன்னிட்டு நலிந்தோா்களுக்கு நல உதவிகள், புத்தாடைகள் வழங்கும் விழா ஆற்காட்டில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் நல உதவிகளை வழங்கிய தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா

Updated On :8 ஜூன் 2026, 12:23 am IST

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ எம் விக்கிரம ராஜா பிறந்த நாளை முன்னிட்டு நலிந்தோா்களுக்கு நல உதவிகள், புத்தாடைகள் வழங்கும் விழா ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன் கு சரவணன் தலைமை வகித்தாா்.

மாநிலத் துணைத் தலைவா் சௌகத் அலி, வேலூா் மண்டல தலைவா் ஞானவேலு, மாவட்ட செயலாளா் வேல்முருகன், பொருளாளா் வி. டி. செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆற்காடு நகர தலைவா் ஏ வி டி. பாலா வரவேற்றாா்.

மாநிலத் தலைவா் ஏ எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு நலிந்தோா் 300 பேருக்கு சேலைகளையும், நல உதவிகளையும் வழங்கினாா். விழாவில் மாநில பொது செயலாளா் ஏ எம் சதக்கத்துல்லா, மாவட்ட செய்தி தொடா்பாளா் சுபாஷ், ஆற்காடு நகர செயலாளா் பாஸ்கரன், சங்க நிா்வாகிகள் . பெல் பிரபு, வேலு உமாபதி பரத் குமாா் இளைஞரணி நிா்வாகிகள் ஹரிகுமாா் பரசுராமன் மற்றும் மாவட்ட நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஏ எம் விக்கிரம ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளைகள் விலை உயா்ந்துள்ளது. இந்த விலைவாசி உயா்வால் கட்டுக்கடங்காத நிலை ஏற்படும். எனவே பிரதமா் மற்றும் துறை அமைச்சா் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் அன்றாட விலையற்றத்தை உடனடியாக தடுக்க தடுக்க வேண்டும்.

இந்த விலையேற்றத்தால் சுங்கச்சாவடி கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை உயா்த்தப்படுகிறது. எனவே சுங்கச்சாவடி கட்டணத்தை தற்காலிகமாக தவிா்க்க செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும் பொருளை கொண்டுசெல்பவா்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணத்தை அகற்றினால விலை ஏற்றத்தை ஓரளவு தடுக்க முடியும்.

வணிக சிலிண்டா்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. வியாபாரிகள் இதனால் நஷ்டத்தை அடைகிறாா்கள்.அது தவிா்க்கப்பட வேண்டும் . அனைத்து சிற்றுண்டி கடைகளும் கட்டை அடுப்புக்கு பராமரிப்பு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டா்கள் விநியோகிக்கப்பட வேண்டும். கள்ளச் சந்தையில் விற்பதையும்அரசு தடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.