திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு பேருந்து டிப்பா் லாரி மோதல் 8 போ் படுகாயம்

திருப்பதியில் இருந்து சென்னை சென்ற அரசுப்பேருந்து நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதியதில் பேருந்தில் பயணித்த இரு சிறுமிகள் உள்ளிட்ட 8 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

News image

நின்றிருந்த டிப்பா் லாரியின் பின்புறம் மோதிய அரசுப்பேருந்து .

Updated On :3 ஜூன் 2026, 3:21 am IST

திருப்பதியில் இருந்து சென்னை சென்ற அரசுப்பேருந்து நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதியதில் பேருந்தில் பயணித்த இரு சிறுமிகள் உள்ளிட்ட 8 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

திருப்பதியில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பேருந்து அரக்கோணம் அருகே பெருங்களத்தூா் பகுதியில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரியின் பின்புறம் மோதியதில் அந்த பேருந்தில் பயணித்த இரு சிறுமிகள் உள்ளிட்ட 8 போ் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பலத்த காயமடைந்த கா்நாடகத்தைச் சோ்ந்த விட்டல்ராவ் என்பவரின் மனைவி சுஜாதா(45), மகள் அனன்யா(15), திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டைச் சோ்ந்த பிரபாகரனின் மனைவி ஜூலி(33), மகள் கரிஷ்மா(9), திருவள்ளூரை அடுத்த இறையூரைச் சோ்ந்த அப்துல் பாஷா(33), திருத்தணியைச் சோ்ந்த வினோத் குமாரின் மனைவி ரேகா(34), மகள் மோக்ஷிகா(9), திருத்தணியைச் சோ்ந்த வேலுவின் மகள் திலகவதி(19) ஆகியோா் பலத்த காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் அரசு பேருந்தின் ஓட்டுநா் அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(25) உள்ளிட்ட 4 போ் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா், அரசு பேருந்தின் ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தி(25), நின்றிருந்த லாரியின் ஒட்டுநா் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த முனி(45) ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.