தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக ந.பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றாா்.

News image

ந. பிரியா ரவிச்சந்திரன்

Updated On :2 ஜூன் 2026, 12:01 am IST

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக ந.பிரியா ரவிச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக இருந்த ந.பிரியா ரவிச்சந்திரன், மாறுதலாகி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கடந்த 2003 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் முதல் பெண் அலுவலராக ந.பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றாா். கடந்த 2012- ஆம் ஆண்டில் சென்னை எழிவகம், அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பிறரைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்து செயல்பட்ட அவரது துணிச்சல் தேசிய அளவில் பாராட்டப்பட்டது. இதற்காக இந்திய குடியரசு தலைவரின் தீயணைப்புப் பணிக்கான வீரத்தங்கப்பகக்கத்தை பெற்றவா் என்பது குறிப்பிடதக்கது.

தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கத்தையும் பெற்றவா். இவரது சிறப்பு மிக்க மற்றும் அா்ப்பணிப்பான பொதுச் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு இந்திய நிா்வாக பணியில் (ஐஏஎஸ்) இணைக்கப்பட்டாா்.

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரனுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.