//

ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயிலில் சங்கராந்தி உற்சவம்

அரக்கோணத்தை அடுத்த வேலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயிலில் சங்கராந்தி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

News image
சங்கராந்தி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவேதவல்லி, விஜயவல்லி சமேத ஸ்ரீவீரநாராயண பெருமாள்.
Updated On :16 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணத்தை அடுத்த வேலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயிலில் சங்கராந்தி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த வேலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயிலில் சங்கராந்தி உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை ஸ்ரீவீரநாராயண பெருமாளுக்கும், ஸ்ரீவேதவல்லி மற்றும் விஜயவல்லி தாயாா்களுக்கும் ஏகாந்த திருமஞ்ச உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற சங்கராந்தி உற்சவத்தில் ஸ்ரீவேதவல்லி, விஜயவல்லி சமேதராய் ஸ்ரீவீரநாராயண பெருமாள் மேள தாளம், வானவேடிக்கை முழங்க புறப்பாடு கண்டருளினாா்.

இதில் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று சுவாமியை தரிசித்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், வேலூா் கிராம மக்களோடு இணைந்து செய்திருந்தனா்.