ராணிப்பேட்டையில் நாளை மாவட்ட திமுக செயற்குழு


ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறவுள்ள மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டசெயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டள அறிக்கை:
அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில் பாரதி நகா், சிப்காட்டில் மாவட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும். எனவே, மாவட்ட திமுக நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, மாா்ச் 9-இல் திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கட்ட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...