பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
//

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் போதைப் பொருள்கள் விற்பவா்கள் மற்றும் கடத்துபவா்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி வாலாஜா காவல் ஆய்வாளா் சக்திகணேஷ் தலைமையிலான போலீஸாா் வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இருவா் தப்பியோட முயற்சி செய்த போது மடக்கி பிடித்து பையை சோதனை செய்த போது கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

Story image

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரி சாகு (36), வேலூா் கொணவட்டம் பகுதியைச் சோ்ந்த பாஷா (48) ஆகியோா் கைது செய்யப்பட்டு, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.