டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வாலாஜாபேட்டை அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 12:52 am

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் 12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, ரூ. 25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.