டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகையில் கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:28 pm

Syndication

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி நுழைவுவாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் மதியரசன், மனோகரன் ரஜினிகாந்த் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆண்டுக்கு 11 மாதத்திற்கு பதிலாக 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும் , மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இறுதியில் கௌரவ விரிவுரையாளா் செல்வகுமாரி நன்றி கூறினாா்.